ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமீர் நாயகனாக நடித்த யோகி படத்தில் அறிமுகமானவர் யோகிபாபு. அதன்பிறகு அமீர் ஹீரோவாக வளர்ந்தாரோ இல்லையோ யோகிபாபு தற்போது குறிப்பிடத்தக்க காமெடியனாகி விட்டார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், சூதுகவ்வும், மான்கராத்தே, காக்கி சட்டை, கொம்பன், காக்கா முட்டை, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என பல படங்களில் அவரது காமெடி பேசப்பட்டதால் தற்போது கைவசம் பத்து படங்களுக்கு மேல் வைத்து பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தனது சம்பளத்தையும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்று உயர்த்தி விட்டிருக்கிறார்.
மேலும், தற்போது அட்டி, தீபாவளி துப்பாக்கி, வீரசிவாஜி, ஆண்டவன் கட்டளை என பல படங்களில் நடித்து வரும் அவர், சில படங்களில் நான்கு ஹீரோக்களில் ஒருவர், சில படங்களில் ஷோலோ காமெடியன் என நடித்து வருபவர், ஓரிரு படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடிக்கிறாராம். இதுபற்றி யோகிபாபு கூறுகையில், சினிமாவில் நடிகனாக வேண்டும் என்றுதான் நான் என்ட்ரி ஆனேன். ஆனால் காமெடி வேடங்களே என்னை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியபோதும், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை காரணமாக சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன் என்று கூறும் யோகிபாபு, எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் பர்பாமென்ஸில் நம்பர்ஒன்னாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்கிறார்.