ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை, இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை, யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது என்று வாழ்க்கையைப் பற்றிய பல தத்துவங்களை பலரும் பல சந்தர்ப்பங்களில் உதிர்த்திருப்பார்கள். ஆனால், இந்த 'திருப்பம்' என்பது யாருக்கு அதிர்ஷ்டமாக அமைந்து அவர்களது வாழ்க்கையைத் திசை திருப்புகிறதோ இல்லையோ சினிமா நட்சத்திரங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.
சிலர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து அவர் உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்த அதிசயம் எல்லாம் இங்குதான் நடந்தது. சினிமாவே பார்க்க மாட்டேன் என்று சொன்னவர்கள் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக எல்லாம் மாறியிருக்கிறார்கள். சமந்தாவிற்கும் அப்படித்தான் ஒரு திருப்பு முனை ஏற்பட்டதாம், இதை அவரே சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது சொல்லியிருக்கிறார்.
'ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து என்னை மாடலிங் செய்ய அழைத்தார்கள். கேமரா என்றாலே பயமாக இருந்த எனக்கு பின்னர் கேமராவிற்கு முன்பாக நிற்பதே வாழ்க்கையா அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்ய ஆரம்பித்து, இன்று முன்னணி நடிகையாக மாறியிருக்கிறேன்,” என தன் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையைப் பற்றி ஆச்சரியத்துடன் சொல்லியிருக்கிறார் சமந்தா.
தமிழில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்த சமந்தாவின் திரையுலக வாழ்க்கை இப்போது முன்னணிக்கு வந்துள்ளது. ஆனால், தெலுங்கில் முதல் படத்திலிருந்தே சமந்தா ஏற்றங்களையே சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.