ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'விஜய்-60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் நிலையில், இரண்டாவது கதாநாயகியாக இன்னொரு மலையாள நடிகையான அபர்ணா வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.. கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கும் இவர் இரண்டாவது நாயகி என்றாலும் கதையை நகர்த்திச்செல்லும் முக்கியமான வேடமாம். ஆனால் மலையாளத்தில் வெறும் இரண்டு படங்களே நடித்துள்ள அபர்ணா வினோத், சர்ச்சைகளின் மொத்த உருவமாச்சே, அவரை எப்படி விஜய் படத்தில் சேர்த்தார்கள் என மலையாள இண்டஸ்ட்ரியில் சிலர் குரல் எழுப்பியுள்ளார்கள்..
பொதுவாக பல நடிகைகள் தங்களது முதல் படம் பிளாப் என்றால் அதுபற்றி வாய்திறக்க மாட்டார்கள். ஆனால் இந்த அபர்ணா வினோத்திடம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவரது முதல் படமான 'ஞான் நின்னுடே கூடேயுண்டு' என்கிற படத்தை பற்றி கேட்டபோது, “அதைப்பற்றி ஏன் கேட்கிறீர்கள்.. தியேட்டரில் நான் மட்டும் தான் உட்கார்ந்து படத்தை பார்த்தேன்.. சுத்த வேஸ்ட்” என கூறி அதிர்ச்சியடைய வைத்தவர் தான் இவர். அதுமட்டுமல்ல, அவரது இரண்டாவது படத்தில் நடித்த ஹீரோ ஆசிப் அலி மீதும் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது படத்தில் தான் முழு உழைப்பை கொட்டி நடித்திருந்ததாகவும் அதில் நல்ல நல்ல காட்சிகளை நாயகன் ஆசிப் அலியின் தூண்டுதலின் பேரில் வெட்டிவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தங்கள் ஊர் என்பதால் கொதித்த அபர்ணா வினோத், இங்கே தமிழில், அதுவும் விஜய் படம் என்பதால் சர்ச்சை எதுவும் கிளப்பமாட்டார் என நம்புவோம