ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த மாதம் கேரளாவை உலுக்கிய மாணவி ஜிஷாவின் பாலியல் பலாத்கார படுகொலையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.. சில வருடங்களுக்கு முன் டில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு பலியான நிர்பயாவின் மரணத்துக்கு இணையான ஒரு கொடூர நிகழ்வுதான் இதுவும்.. சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே இந்த கொடூர நிகழ்வுக்கு ஆளானதாக நாடெங்கிலும் இருந்து இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தன.
ஜிஷாவின் இழப்பால் வாடும் அவரது தாயாருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நடிகர் ஜெயராம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். ஜெயராம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' படம் பலத்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று எர்ணாகுளம் அருகில் உள்ள ஆலுவா வந்த ஜெயராம் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் சிசுபவன்' என்கிற குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 180 குழந்தைகளுடன் படத்தை பார்த்து அவர்களுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய ஜெயராம், ஆடுபுலியாட்டம் படத்தில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை, மரணமடைந்த ஜிஷாவின் குடும்பத்துக்கு வழங்க முடிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டார்.