ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளிவந்த 'பிரம்மோற்சவம்' எதிர்பாராத விதத்தில் படுதோல்வி அடைந்துவிட்டது. இந்தப் படத்தின் தோல்வி இந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களைப் பெரிதும் பாதித்துவிட்டது. பட வெளியீட்டுக்குப் பின் சுற்றுலா போகலாம் என நினைத்திருந்த மகேஷ்பாபு கூட அதை யோசித்து வருகிறாராம்.
இதனிடையே படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரி செய்யும்படி மகேஷ்பாபுவையும், பிவிவி சினிமாவையும் கேட்டு வருகிறார்களாம். எதையும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. படத்தின் இந்த அளவிலான நஷ்டத்திற்கக் காரணம் படத்தின் பட்ஜெட்தான் காரணம் என டோலிவுட்டில் சொல்கிறார்கள். அதனால், மகேஷ்பாபு தன்னுடைய சம்பளத்திலிருந்து சில கோடிகளை தயாரிப்பாளருக்குத் தர முடிவெடுத்துள்ளாராம். அதோடு, மீண்டும் பிவிபி சினிமா தயாரிப்பில் ஒரு படம் நடித்துத் தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறாராம்.
'பிரம்மோற்சவம்' படத்தின் தோல்வியால் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்க உள்ள ஏ.ஆர்.முருகதாஸூக்குத்தான் சிக்கல் வந்துள்ளது. இந்த புதிய படத்திற்காக சுமார் 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக திட்டமிட்டிருந்தார்கள். இப்போது பட்ஜெட்டை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள் என முருகதாஸிடம் சொல்லிவிட்டார்கள் எனத் தகவல் பரவியுள்ளது.