ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
50 வயதை கடந்த போதிலும் தெலுங்கு திரை உலகில் இன்றும் இளமையுடன் வலம் வரும் நாகர்ஜுனா, திரை உலகில் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷ்வர ராவின் மகனான நாகர்ஜுனா, 1986 மே 23ல் வெளியான விக்ரம் எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமனார்.
80, 90களில் முன்னணி நடிகராக விளங்கிய நாகர்ஜுனா 90க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நாகர்ஜூனா நடித்த கீதாஞ்சலி எனும் தெலுங்கு படம் தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் வெளிவந்து தமிழிலும் வெற்றி பெற்றது. நாகர்ஜூனா நடிப்பில் வெளியான சொக்கடே சின்னி நயன படத்தின் வெற்றிக்கு பின்னர் சமீபத்தில் நாகர்ஜுனா கார்த்தியுடன் இணைந்து நடித்த ஊபிரி திரைப்படம் தமிழ் தோழா என்ற பெயரில் வெளிவந்து வெற்றி அடைந்தது.
இன்றுடன் (மே 23) திரை உலகில் தனது 30 வருடங்களை நிறைவு செய்யும் நாகர்ஜுனா, டுவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த முப்பது வருடங்களுக்கான பயணத்தை இன்று துவங்கியுள்ளதாகவும், நாகர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். நாகர்ஜுனா ரசிகர்களும், நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.