ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின்னர் இல்லற வாழ்க்கைக்கு சென்றதால் சினிமாவிற்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில் ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தில்வாலே படத்தை தொடர்ந்து தன் கணவரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கஜோல். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கஜோலுக்கு இப்போது கதை தேர்வு செய்வது சிரமமாக உள்ளதாம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ''இன்றைய சினிமா சூழலில் கதை தேர்வு செய்வது கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது. இன்றைக்கு சினிமாவில் நிறைய மாற்றம் வந்துவிட்டதால் சரியான கதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அப்படி தேர்த்தெடுக்கும் கதைகளும் புதியவைதானா இல்லை பழைய கதையா என்ற குழப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.