ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டவர் அனிருத். தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வளர்ந்து வந்த இவர், விஜய்யின் கத்தி, அஜீத்தின் வேதாளம் படங்களுக்குப்பிறகு ரொம்ப உயரத்துக்குப்போய் விட்டார். குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான் பாணியில் இரவு நேரங்களில் மட்டுமே ரெக்கார்ட்டிங் வேலைகளில் ஈடுபடும் அனிருத், பகல் முழுக்க தூக்கம்தான். இப்படி பகலையே பார்க்காமல் அவர் இசையமைத்து வந்த நேரம் பீப் சாங் விவகாரத்தில் சிக்கி தடுமாறிப்போனார். இதனால் அனிருத்தின் மார்க்கெட்டும் சற்று ஆட்டம் கண்டது.
என்றாலும், தற்போதும் அஜீத், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்கள் அவர் கைவசமிருப்பதால், தப்பித்துக்கொண்டார் அனிருத். அதேசமயம், இனிமேலும் தமிழை மட்டுமே நம்பிக்கொண்டி ருக்க வேண்டும் என்று தெலுங்கு படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் இரண்டு படங்களுக்கு இசையமைக்க பேசியுள்ளாராம். ஏற்கனவே தமிழில் அவர் இசையமைத்த 3, எதிர்நீச்சல், டேவிட், இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, நானும் ரெளடிதான், வேதாளம், தங்கமகன் என பல படங்கள் தெலுங்கிலும் டப்பாகி வெளியானதால், அவரது பாடல்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறதாம். அதனால் தேவி ஸ்ரீ பிரசாத், தமன் வரிசையில், இனிமேல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இசையமைக்கப்போகிறாராம் அனிருத்.