ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் போட்டியிட்டனர்.. இதில் பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர்கள் கணேஷ்குமாரும், ஜெகதீஷும் தங்கள் மீது தாங்களே ஒருவருக்கொருவர் புகார் தொடுத்துக்கொண்டு பிரச்சனைகளை உருவாக்கினார்கள் என்றால் கொல்லம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் முகேஷ் வேறுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டுள்ள முகேஷ், இதற்காக தேர்தல் கமிஷனிடம் தவறான ஆதாரங்களை கொடுத்துள்ளார் என அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான சரிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் கமிஷனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முகேஷ் கொடுத்துள்ள ஆதாரங்களில் தனது மனைவி பெயராக, தற்போது அவரது இரண்டாவது மனைவியாக உள்ள மெத்தில் தேவிகா பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு வாரிசுகள் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதனை கேள்விப்பட்டு கோபமான சரிதா, தன்னிடம் முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில் இன்னொரு பெண் பெயரை எப்படி குறிப்பிடலாம் என்றும், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளதை எப்படி மறைக்கலாம் என்றும் இது தேர்தல் கமிஷனையே ஏமாற்றும் செயலாகும் என்றும் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் முகேஷ் ஒரு அரசியல் தலைவராக இருக்க தகுதியானவரே அல்ல எனவும் கூறியுள்ளார்.