ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருகிற 16ந் தேதி தமிழக சட்டசபைத்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
நடிகர் நடிகைகள் வழக்கம்போல் தங்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க இருக்கிறார்கள். பெரிய நடிகர்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினி எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. தற்போது அவர் 2.ஓ படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருப்பதால் அவர் கட்டாயம் போயஸ்கார்டன் அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களிப்பார் என்று தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இதே வாக்குச்சாவடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாஷ் நாயுடு படப்பிடிப்பு வருகிற 16ந் தேதி அமெரிக்காவில் தொடங்குவதாக கமல் அறிவித்திருக்கிறார். அவர் வாக்களிப்பது சந்தேகம் என்கிறார்கள். ஆனால் ஊரில் இருந்தால் வாக்களிப்பேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். சூர்யா குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். அதனால் அவர் வாக்களிப்பது சந்தேகம். அஜீத் கால் ஆபரேஷன் செய்து ஓய்வெடுத்து வருகிறார். இருந்தாலும் அவர் வாக்களிப்பார் என்று தெரிகிறது. முக்கிய நடிகர்கள் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.