ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டில் அதிகமாகி வருகிறது. மில்கா சிங், மேரிகோம், அசாரூதின், தோனி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் இப்போது மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருக்கிறார்கள். பிரபல இயக்குநர் பிரமோத் கோர், இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம் சென்று அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்துள்ளார்.
இதுகுறித்து பிரமோத் கோர் கூறியுள்ளதாவது... ''அப்துல் கலாமின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு முன்னர் கண்டிப்பாக அவரின் குடும்பத்தாரிடம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் படம் எடுப்பேன். மேலும் அவரின் அக்னி சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட 20 புத்தகங்களையும் வாங்கியுள்ளேன். வெறும் இரண்டரை மணிநேரத்தில் அப்துல் கலாமின் முழுவாழ்க்கையையும் படமாக கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை, இருந்தாலும் என்னால் முடிந்தவரை அவரைப்பற்றிய பல விஷயங்களை படத்தில் காண்பிப்பேன். இந்தப்படத்தில் அப்துல் கலாமாக இர்பான் கானை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன், இந்தரோலுக்கு அவரைத்தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.