ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த 2013, 2014களில் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் ரிலீஸ் செய்த மலையாள நடிகை பாமாவை, கடந்த வருடம் ஆளை எங்கே காணோம் என தேடத்தான் வேண்டி இருந்தது.. காரணம் கடந்த வருடம் ஒரே ஒரு படம் மட்டும், அதுவும் கன்னடத்தில் தான் நடித்திருந்தார் பாமா.. ஆனால் அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக தற்சமயம் நான்கு மலையாளப்படங்களில் நடித்து வரும் பாமா, அடுத்ததாக கொல்கத்தாவில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்..
மம்முட்டி நடித்த 'பேஸ் டூ பேஸ்' படத்தை இயக்கிய வி.எம்.வினு இயக்கும் இந்தப்படத்திற்கு 'மறுபடி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வட இந்திய ஜெயிலில் இருந்த தண்டனை கைதியான பெண் ஒருவர் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.. தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தாராலும் தன்னை சுற்றியுள்ள சமூகத்தாலும் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதையும் அதிலிருந்து மீள முயற்சி எடுக்கும் அவள் எப்படி ஒடுக்கப்படுகிறாள் என்பதையும் முழுநீளப்படமாக எடுக்க இருக்கிறார்களாம். இந்த கேரக்டரில் தான் பாமா நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் பாமாவின் கணவனாக நடிக்கிறார் நடிகர் ரகுமான். வரும் மே-9ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.