ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இது உண்மையா..? இது நடக்குமா என்பதையெல்லாம் தாண்டி இதை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்தை பொறுத்தவரை கடந்த மூன்று வருடங்களில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், சிவா, கௌதம் மேனன் என ஒரு குறிப்பிட்ட நபர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். வேதாளம் படத்தை தொடர்ந்து அடுத்த படமும் சிவாவின் டைரக்சனில் தான் நடிக்கிறார் அஜித். அதை தொடர்ந்து அடுத்த படத்தில் விஷ்ணுவர்தன் டைரக்சனில் நடிக்கவுள்ளதும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்ட ஒன்றுதானாம். இந்தப்படத்தில்தான் அஜித்துடன் மோகன்லாலையும் இணைந்து நடிக்கவைக்க முயற்சி எடுத்து வருகிறாராம் விஷ்ணுவர்தன்.
இதற்கு அஜித், மம்முட்டி இருதரப்பிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் தெரிகிறது.. இந்த விஷயம் சாத்தியமான ஒன்றுதான் என்பதை இரண்டு கோணங்களில் சொல்கிறார்கள் விஷ்ணுவர்தன் தரப்பினர்.. ஒன்று மலையாள மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோரில் இன்னும் மோகன்லாலுடன் நடிக்காத மனக்குறை அஜித்துக்கு நீண்ட நாட்களாகவே உள்ளதாம். அதேபோல கமல், விஜய், ஜூனியர் என்றி.ஆர், புனித் ராஜ்குமார் என மற்ற மொழி பிரபலங்களுடன் இணைந்து நடித்துவிட்ட மோகன்லாலுக்கு அஜித்துடனும் நடித்துவிடவேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறதாம். அதனாலேயே இந்த இருவரும் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.