ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படம் வாகா. விக்ரம் பிரபு, கன்னட நடிகை ரன்யா நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார், சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரரான விக்ரம் பிரபு தாடியோடு இருக்கிறார். சீக்கிய வீரர்கள் தவிர மற்ற ராணுவ வீரர் தாடி வைக்க அனுமதி இல்லை. இதில் எப்படி விக்ரம் பிரபு தாடி வைத்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
வாகா உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம். வீட்டில் பொறுப்பில்லாமல் இருக்கும் இளைஞன் ராணுவத்தில் சேர்ந்த பிறகு எப்படி பொறுப்போடு நாட்டை காப்பாற்றுகிறான் என்கிற கதை. காஷ்மீரில் பணியாற்றும் அவனுக்கு ஒரு காஷ்மீர் பெண்ணுடன் காதல் வருகிறது. அந்த காதலால் வரும் பிரச்சினைகள் நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் இவற்றை அவன் எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.
படத்தின் ஸ்டில்களை பார்த்து விட்டு ராணுவ வீரன் தாடி வைத்திருப்பானா என்று கேட்கிறார்கள். ராணு வீரர்கள் தாடி வைத்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தாடி வைத்துக் கொள்ளலாம். படத்தில் விக்ரம் பிரபு வாசு என்கிற எல்லை பாதுகாப்பு படை வீரனாகத்தான் வருகிறார். ராணு நடைமுறைகள் நாட்டின் எல்லையில் உள்ள பிரச்சினைகள். அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே திரைக்கதை அமைத்துள்ளேன். ஹரிதாஸ் படத்தில் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். இதில் ஒரு நாட்டின் குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறேன். என்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன்.