ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்டமாக வெளியான 'பாகுபலி'யாகட்டும் அல்லது அதைவிட மிக பிரமாண்டமாக உருவாகிவரும் 'பாகுபலி-2' ஆகட்டும்.. இரண்டிலுமே தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்களும் மட்டுமே, சுருக்கமாக சொன்னால் இரு மொழிக்கும் அறிமுகமான நடிகர்களே இருந்தார்கள்.. மலையாள நடிகர்களின் பங்களிப்பு ஏதும் அதில் இல்லை.. சமீபத்தில் 'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்து தான் எடுத்த புகைப்படம் ஒன்றை மலையாள நடிகர் ஜெயசூர்யா தனது முக நூலில் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, அதில் வேடிக்கையாக 'பாகுபலி-3'யில் தான் நடிக்க இருப்பதாக ஒரு கேப்சனையும் போட்டவர், கொஞ்ச நேரத்தில் அதை எடுத்துவிட்டு சும்மா தமாசுக்காக போட்டதாக சொல்லி தற்போது சாதரணமாக ஒரு கேப்சனை போட்டுள்ளார்.. அவ்வளவு ஏன் தனது மனைவியிடமே தான் 'பாகுபலி-3'யில் நடிக்கப்போவதாக அள்ளிவிட, அவரும் உண்மையென்று நம்பிவிட்டாராம். அதன்பின்னர்தான் அது உண்மையில்லை என்றும், ராஜமவுலிக்கு 'பாகுபலி-3' படத்தை இயக்கும் எண்ணமே இல்லை என்று அவருடன் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார் ஜெயசூர்யா.