ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலகிருஷ்ணா தனது 100வது படமாக உருவாகும் வரலாற்று திரைப்படம் கௌதமிபுத்ர சதகர்னி படத்திற்காக உடற் பயிற்சி, வரலாறு படித்தல் என பிசியாக உள்ளார். பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மொரொகூவில் துவங்கவுள்ளது. கஞ்சே எனும் தேசிய விருது வென்ற படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் இப்படத்தை இயக்குகின்றார்.
பாலகிருஷ்ணா இப்படத்தில் தனது மகன் மோக்ஷக்னா-வை இயக்குனர் க்ரிஷிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார். விரைவில் திரைப்படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட மோக்ஷக்னா உதவி இயக்குனராக மாறிவிட்டார். திரைப்படங்களில் நடிப்பது பற்றி அறிந்து கொள்ள முதலில் உதவி இயக்குனராக பணியாற்ற விரும்புவதாக மோக்ஷக்னா பாலகிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். மோக்ஷக்னாவின் முடிவை அறிந்த பாலகிருஷ்ணா மகிழ்ச்சியுடன் க்ரிஷிடம் உதவி இயக்குனராக தனது மகனை சேர்த்து விட்டுள்ளார். பாலகிருஷ்ணாவும் தனது தந்தை என்.டி.ஆரின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.