ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தைப் பற்றியோ, ஒரு நடிகரைப் பற்றியோ நல்ல விதமான செய்திகள் வந்தால்தான் அந்தப் படம் மீதான நல்ல இமேஜும், அந்த நடிகரைப் பற்றிய நல்ல இமேஜும் உருவாகும். ஆனால், சமீப காலமாக 'நெகட்டிவ்' பப்ளிசிட்டியில் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாசிட்டிவ்வாக கிடைக்கும் பப்ளிசிட்டியை விட இப்படி நெகட்டிவ்வாக கிடைக்கும் பப்ளிசிட்டி எளிதில் மற்றவர்களைச் சென்று அடைகிறது என்ற தவறான எண்ணத்தில் சிலருக்கு சிலர் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம். அந்த வரிசையில் நெகட்டிவ் ஆலோசனைகளைப் பெற்று அதை சிம்பு செயல்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.
அப்படி ஒரு நெகட்டிவ் ஆலோசனைதான் நடிகர் சங்க விலகல் விவகாரம் என்கிறார்கள். சிம்பு நடிகர் சங்கத்தை விட்டு விலகப் போவதாக அவருக்கு மிக மிக நெருக்கமான இரு பத்திரிகையாளர்களிடம் மட்டும் தகவலைச் சொல்லியிருக்கிறார். “கவலைப்படாதீங்க, இதை அப்படியே நம்ம பத்திரிகையில போட்டு, டிவிட்டர்லயும் டிரென்டிங்கில கொண்டு வந்துவிடலாம்,” என அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். சிம்பு நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் என்று சொன்னால், 'பீப் சாங்' விவகாரத்திற்கு மீடியாக்களிடையே அதே பேச்சாக இருந்தது போல இந்த 'விலகல்' விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அந்தோ, பரிதாபம், சிம்பு நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் என்று சொன்னதற்கு யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. அதை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்ட டி.ராஜேந்தர் உடனே சிம்புக்கு ஆலோசனை சொல்லும் விதமாக ஒரு அறிக்கையை அவசரமாக தயாரித்து அனுப்பினார். பெயருக்கு விஷாலை எதிர்த்தும், நாசரை ஆதரித்தும் அதில் இருமுகம் காட்டியிருக்கிறார். அதோடு தன் மகனுக்கு ஆலோசனை சொல்லும் அந்த இரண்டு பத்திரிகையாளர்களை மகனை நெருங்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
கோலிவுட்டிலேயே 'பாண்டிராஜுக்குக் கொடுக்க வேண்டிய கோடிகளைக் கொடுத்துவிட்டு, போய், உங்க படத்தை ரிலீஸ் பண்ற வேலையப் பாருங்க தம்பி' என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.