ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த சொக்கடே சின்னி நயன படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா, நாகார்ஜுனாவின் தயாரிப்பு நிறுவனமான அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று நாக சைதன்யா நாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் நாக சைதன்யா கலந்து கொள்ளவில்லை ஆனால் அவரது தந்தை நாகார்ஜுனா கலந்து கொண்டார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பிலும், மலையாள பிளாக்பஸ்டர் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்திலும் நாக சைதன்யா பிசியாக நடித்து வருகின்றார். இவ்விரு படங்களை முடித்த பின்னர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார்.