ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்களாக மாறிய படங்கள் தான் நிவின்பாலி நடித்த பிரேமம்' மற்றும் துல்கர் சல்மான் நடித்த 'சார்லி'.. இளையவர்களை மட்டும் அல்லாமல் சீனியர்களையும் இந்த இரண்டு படங்களும் கவர்ந்து இழுத்தது தான் ஆச்சர்யம். அதனால் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் இந்தப்படங்களை சிலாகித்து பார்த்ததில் வியப்பொன்றும் இல்லை.. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து தன்னை மாற்றி யோசிக்க தூண்டிய படங்கள் தான் இவை இரண்டும் என கூறியுள்ளார் பிரியதர்ஷன்.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த இரண்டு படங்களும் மலையாள சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சிய படங்கள் என்றவர், இந்தப்படங்களை பார்த்த பின்னர்தான், தற்போது மோகன்லாலை வைத்து தான் இயக்கிவரும் 'ஒப்பம்' படத்தில் புதுவிதமான சில ஐடியாக்களை புகுத்தும் உத்வேகம் கிடைத்தது என கூறியுள்ளார். மேலும் இவை தவிர பஹத் பாசிலின் நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படமும் வித்தியாசமான முயற்சிக்கு உதாரணமான படம் தான்.. மலையாள சினிமா நிச்சயமாக புதிய பாதையில் நகர்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.