ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம், அடுத்தப் படத்தையும் சி.வி.குமார் தயாரிப்பிலேயே இயக்க இருக்கிறார். ராம் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படம் ஒரு போலீஸ் கதையாம். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர். ஜெய் உடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
உதயம் படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்த புகழ் படம் கடந்த வாரம் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை. சோஷியல் மீடியாக்களில் புகழ் படத்தைப் பற்றி ஏகப்பட்ட பில்ட்அப்கள் கொடுத்தும் பிரயோஜனமில்லாமல்போய்விட்டது. சென்னையில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலேயே புகழ் படத்துக்கு கூட்டமில்லை. எனவே கடும் அப்ஸெட்டில் இருக்கிறாராம் ஜெய்.
முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜெய், சம்பளத்தை மட்டும் புகழ் படம் வெளியான பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். அதாவது படம் வெற்றியடைந்தால் சில கோடிகள் கூடுதலாக கேட்கலாம் என்பது அவரது கணக்கு. நடந்ததோ வேறு. அவர் கேட்க நினைத்த சம்பளத்தில் பாதி கூட தற்போது கிடைக்காது என்பதால் செம வருத்தத்தில் இருக்கிறாராம் ஜெய்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....!