ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குக்கூ படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து தன் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜூமுருகன். தர்மபுரியை கதைக்களமாகக் கொண்ட இப்படம் 100 சதவிகிதம் தர்மபுரியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை டிஸ்கஷனை தர்மபுரியிலேயே நடத்தினார் ராஜூமுருகன். கதை டிஸ்கஷன் தொடங்கி படப்பிடிப்பு வரை தர்மபுரியிலேயே தங்க வேண்டியிருந்ததால், அங்கேயே ஒரு அலுவலகத்தை வாடகை பிடித்து பட பணிகளை செய்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டப்பிங் தொடங்கப்பட்டுள்ளநிலையில் இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை.
பல்வேறு தலைப்புகளை ஆலோசித்த இயக்குநர் ராஜூமுருகன் கடைசியில் ஒரு தலைப்பை இறுதிசெய்து, அதை பதிவு செய்ய சென்றுள்ளனர். அப்போதுதான், அந்த தலைப்பை ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் பதிவு செய்து வைத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. உடனே, ட்ரீம்வாரியர் பட நிறுவனத்தை சேர்ந்த எஸ்.ஆர்.பிரபு, மணிரத்னத்தை அணுகி அந்தத் தலைப்பைக் கேட்டிருக்கிறார். அந்த தலைப்பில் அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாக சொன்ன மணிரத்னம் அத்தலைப்பை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். மணிரத்னம் பதிவு செய்து வைத்த தலைப்பைத் தர மறுத்து விட்டதால் வேறு தலைப்பை யோசித்து வருகிறார் ராஜூமுருகன்.