ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்குப் பிறகு நடித்த அரிமா நம்பி படத்தில் சரக்கு அடிக்கும் காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளானவர் ப்ரியாஆனந்த். அதன்காரணமாக, இனிமேல் அவர் பரபரப்பான நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து அவர் நடித்த இரும்புக்குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் மார்க்கெட் டில் பின்தங்கினார் ப்ரியாஆனந்த்.
இருப்பினும் தற்போது கூட்டத்தில் ஒருத்தன், முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ள ப்ரியா ஆனந்த், ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்தவர் என்பதால் மீண்டும் தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அந்த முயற்சி அவருக்கு இப்போது ஒரு கன்னட படவாய்ப்புக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் நடிக்கும் ராஜகுமாரா என்ற படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் ப்ரியாஆனந்த். இந்த படத்தில் அவர் மட்டுமே சிங்கிள் ஹீரோயினாம்.