ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அங்காடி தெரு படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் சிக்கி, மீண்டு வந்துள்ளார். அஞ்சலி தற்போது கை நிறைய படங்களுடன் நடித்து வருகின்றார். அஞ்சலி விமலுடன் இணைந்து நடித்துள்ள மாப்ள சிங்கம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் போன்ற படங்களில் அஞ்சலி நடித்து வருகின்றார். தெலுங்கில் சித்ரங்கதா என்ற திகில் படத்திலும் அஞ்சலி நடிக்கின்றார். இப்படம் தமிழில் யார் நீ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இயக்குனர் அஷோக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அஞ்சலி பாடல் ஒன்றும் பாடியுள்ளாராம். பாடகர் செல்வ ஸ்வாமிநாதனுடன் இணைந்து அஞ்சலி அப்பாடலைப் பாடியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.