ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக டைரக்டர் ராம்கோபால்வர்மா படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. என்றாலும், அவ்வப்போது இணையதளத்தில் இந்திய அளவில் உள்ள பிரபலங்களைப் பற்றிய கமெண்ட்டுகளை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து சமந்தாவும் ஆந்திராவில் வெளியாகும் படங்களைப்பற்றிய கமெண்ட்களை இணைய பக்கத்தில வெளியிட்டு பரபரப்பு நடிகையானார்.
அந்த வகையில், மகேஷ்பாபு நடித்த ஒரு தெலுங்கு படத்தின் நாயகி அவர் முன்பு மண்டியிட்டு நிற்பது போன்ற போஸ்டர்கள் வெளியானபோது பெண்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாக துணிச்சலாக கருத்து சொல்லி, மகேஷ்பாபு கடும் கோபத்துக்கும் ஆளானார் சமந்தா. அதனால் பின்னர் படிப்படியாக தனது டுவிட் கருத்துக்களை நிறுத்திக்கொண்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார் சமந்தா.
இந்நிலையில், சமந்தா நடித்த படங்கள் தொடர்ந்து சறுக்கிக்கொண்டு வருவதால் அவர் மீதான பரபரப்பு தற்போது அடங்கி விட்டது. அதனால், பிரபலங்களைப்பற்றிய கருத்துக்களை ட்விட் செய்து பரபரப்பு வளையத்துக்குள் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளார் சமந்தா. அந்த வகையில், மகேஷ்பாபு மற்றவர்களை கலாய்ப்பதில் வல்லவர், பவன் கல்யாண் மற்றவர்களை துருவி ஆராயக்கூடியவர் என மனதில் பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்த கருத்துக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் எதுவும் சொல்லாதபோதும், அவர்களின் ரசிக கோடிகள் சமந்தாவுக்கு சூடான பதில் கொடுத்து வருகிறார்களாம்.