ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆள்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். அவர் தற்போது மெட்ரோ என்ற படத்தை இயக்கி உள்ளார். சிரிஷ் என்ற புதுமுகத்துடன் மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்த மாயா ஹீரோயினாக நடிக்கிறார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் தினமும் கிலோ கணக்கில் தங்கம் பிடிபடுகிறது. காரை வழிமறித்து கிலோ கணக்கில் தங்கத்தை கொள்ளை அடிக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வரும் திருடன் அறுத்துச் செல்கிறான். இவை தினம் தினம் செய்திகளாகவே கடந்து போகிறது. ஆனால் இந்த மூன்றுக்கும் தொடர்பு உண்டு.
தங்கத்தை திருடுவது ஒரு கும்பல், அதை விற்பது இன்னொரு கும்பல், அதை சர்வதேச அளவில் மார்க்கெட்டிங் செய்வது ஹைடெக் கும்பல். இந்த நெட்ஒர்க் தான் தங்கத்தை கொண்டு உலகத்தை ஆட்சி செய்து வருகிறது. சாதாரண செயின் பறிப்பு திருடனலிருந்து கிலோ கணக்கில் நாட்டுக்கு நாடு கடத்துகிறவனுக்கும் நெட் ஒர்க் இருக்கிறது. தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் தான் இவர்களின் மூலதனம். இதை அடிப்படையாக வைத்து கமர்ஷியலாக உருவாக்கப்பட்டிருக்கும் படம்தான் மெட்ரோ.
இந்தப் படத்திற்காக 2 வருடங்கள் இது தொடர்பாக ஆய்வு செய்திருக்கிறேன். செயின் திருட்டு வழக்கு, தங்க கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்று திரும்பியவர்களை சந்தித்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். நிச்சயம் இந்தப் படம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிறார் ஆனந்த் சங்கர்.