ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில இயக்குனர்களை நாம் குறைசொல்ல முடியாது. காரணம் அவர்கள் காசுக்காக படம் இயக்காமல் கலைக்காக மட்டுமே படம் இயக்குபவர்கள். ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்கள் பலவற்றில் நம் சமூகப்பார்வையின் அளவுகோலின்படி ஆபாசம் நிறைந்திருக்கிறது என காரணம் காட்டியே பல படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதனால் அவை இந்த சமூகத்துக்கு சொல்லவந்த கருத்துக்களை கண்களையும் காதுகளையும் மூட்டி நிராகரித்து விடுகின்றனர் சென்சார் அதிகாரிகள். அப்படி நிராகரிக்கப்பட்ட ஒரு படம் தான் 'சாயம் பூசிய வீடு'.
சகோதரர்களான சந்தோஷ் பாபுசேனன், சதீஷ் பாபுசேனன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபலமான நடிகர்கள் என யாருமில்லை. தனியாக வசிக்கும் ஒரு இளம் தம்பதியின் வாழ்வில் ஒரு பெரியவர் குறுக்கிடுகிறார். அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கலை கொஞ்சம் அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நடித்துள்ள நாயகி நேஹா மகாஜனின் அப்பட்டமான அரை நிர்வாண காட்சிகளில் அதிர்ந்து போய் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்களாம்.
இயக்குனர்களோ, எங்களுக்கு 'ஏ' சான்றிதழாவது கொடுங்கள் போதும் என கூற, படத்தையே ரிலீஸ் செய்யக்கூடாது என்கிறோம் இதில் சான்றிதழாவது ஒண்ணாவது என திமிறியிருக்கிறார்கள்.. வேண்டுமானால் நாங்கள் சொல்லும் காட்சிகளை தூக்கி வீசிவிட்டு வாருங்கள், அப்போது வேண்டுமானால் 'ஏ' சான்றிதழ் தருகிறோம் என்று தயவு காட்டியிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர்கள் இருவரும் கோர்ட் படியேற, படத்தை பரிசீலித்த கோர்ட், 'ஏ' சான்றிதழ் கொடுக்கும்படி சென்சாருக்கு உத்தரவிட்டுள்ளதாம். இதை முன்பே செய்திருந்தால் பல சர்வதேச விழாக்களில் எங்களது படமும் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றிருக்குமே என வருத்தப்படுகிறார்கள் இந்த இரட்டை சகோதரர்கள்.