சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கிட்டத்தட்ட 'ஜிகர்தண்டா' படத்தில் டைரக்டர் ஆவதற்காக சித்தார்த் படத்தின் கதையை தயார்செய்ய மதுரைக்கு போவாரே, அதேபோன்ற ரூட்டைத்தான் நிவின்பாலி தன்னுடைய 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்துக்காக ரியலாகவே பயன்படுத்தியுள்ளார். இது முதன்முதலாக அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம்.. ஆனால் சுரேஷ்கோபியின் பரத்சந்திரன் ..எஸ் மாதிரியோ, மம்முட்டியின் பல்ராம் ஐ.பி.எஸ் கேரக்டர் போலவோ, மோகன்லாலின் பாபா கல்யாணி ஐ.பி.எஸ் கதாபாத்திரம் போலவோ வழக்கமான மலையாள படங்களின் கிளிஷேக்களாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். படத்தின் இயக்குனர் அப்ரிட் ஷைனும் கதையை புதுவிதமாகவே எழுதியிருந்தார்.
அதிரடி போலீஸ் அதிகாரி என்றால் சுரேஷ்கோபியின் ஆறு போலீஸ் படங்களை பார்த்தாலே போதும். ஆனால் யதார்த்தம் மீறாத போலீஸ் அதிகாரியாக அல்லவா நிவின்பாலி இதில் தன்னை பிரதிபலிக்கவேண்டும்.. அதனால் இயக்குனர் அப்ரிட் ஷைனும் நிவின்பாலியும் கேரளாவில் உள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று ஏறி இறங்கினார்கள்... அங்கே போலீஸார் ஒவ்வொரு வழக்கையும் எப்படி ஹேண்டில் செய்கிறார்கள், குற்றவாளிகளை எப்படி டீல் செய்கிறார்கள், அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல் என்ன, சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையெல்லாம் நேரிலேயே பார்த்துதான் தனது பிஜூ பவுலோஸ் கதாபாத்திரத்தை இயல்பான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறாராம் நிவின்பாலி. ரசிகர்களுக்கு விருந்து படிக்கும் விதமாக வரும் பிப்-5ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகிறது.