ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பூஜாகாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜாகாந்தி. கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது செல்போனுக்கு டாக்டர் கிரண் என்பவர் கடந்த 3 நாட்களாக ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுள்ளார். இதையடுத்து நடிகை பூஜாகாந்தி, டாக்டர் கிரணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவருக்கு கிரண் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாக திட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி நடிகை பூஜா காந்தி போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் டாக்டர் கிரணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பூஜா காந்தி கூறுகையில், எங்களுக்கு சொந்தமான காரை டாக்டர் கிரண் அவர் வாங்கி தந்ததாக கூறுகிறார். நான் நடிகையாக இருக்கிறேன். எனது தந்தை தொழில் செய்து வருகிறார். எனக்கு தேவையானவற்றை வாங்கி தர எனது பெற்றோர் இருக்கிறார்கள். அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. கார் எங்களுக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. அவர் டாக்டர் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். மற்றபடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, என்றார்.