ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன். புரசைவாக்கத்தில் அபிராமி மெகாமால் என்ற பிரமாண்ட தியேட்டர் வளாகத்தை நடத்தி வருகிறார். அதோடு இதுவரை 300 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாமிர்தம் என்ற படத்தை தயாரித்தார். தற்போது உன்னோடு கா என்ற படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை அபிராமி ராமநாதன் எழுதியுள்ளார். இதன் மூலம் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவரது மனைவி நல்லம்மை ராமநாதன் தயாரிக்கிறார். சுபாவத்திலேயே நகைச்சுவை உணர்வு மிக்கவர் அபிராமி ராமநாதன். சினிமா விழாக்களில் நகைச்சுவை ததும்ப பேசுகிறவர். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுகிறவர். நீண்டநாட்கள் தன் மனதில் தோன்றிய கதையை நகைச்சுவையாக எழுதியுள்ளார்.
நெடுஞ்சாலை ஆரி, மாயா நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன், மிஷா கோஷல் நடிக்கிறார்கள். பிரபு, ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், சத்யா இசை அமைக்கிறார். ஆர்கே இயக்குகிறார். உன்னோடு கா படத்தின் துவக்க விழா நேற்று அபிராமி மெகாமாலில் நடந்தது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.