ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் நானி, 'கிருஷ்ணா காதி வீர பிரேம கதா' எனும் படத்தில் நடித்து வருகின்றார். டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்ற தலைவராக நானி இப்படத்தில் நடித்துள்ளாராம். இயக்குனர் ஹனு ரகவபுடி இயக்கும் இப்படத்தின் வாயிலாக ஹிந்தி நடிகை மெஹரீன் டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகின்றார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மெஹரீன் படத்தின் நாயகன் நானி தனக்கு படப்பிடிப்பு தளத்தில் செய்த உதவிகளைப் பற்றியும், தனது அடுத்த படங்கள் குறித்தும் கூறியுள்ளார்.
நானி குறித்து மெஹரீன் கூறுகையில், இயல்பிலேயே அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்ட நானி, தனக்கும் படப்பிடிப்பின் போது வசனங்கள் பேசவும் பயமில்லாமல் நடிக்கவும் உதவியதாகக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தெலுங்கில் அறிமுக படத்தில் நடித்து வரும் மெஹரீன் மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் தமிழ் படம் ஒன்றிலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.