அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நாக சைதன்யா நடித்து வருகின்றார். மேலும் மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாகசைதன்யா மட்டுமல்லாது அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு அதிக தேதிகள் ஒதுக்க வேண்டி இருந்ததால் இப்படத்திலிருந்து கார்த்தியும் துல்கர் சல்மானும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு பதில் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் ராணாவிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.