ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' மற்றும் 'மிருகம்', உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இடையில் தமிழ், மலையாளம் இரண்டிலும் பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டுக்கு சென்று, ஏற்கனவே பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்தார். அப்போதுதான் அங்கே படித்த ஜாஸ்மினுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து கடந்த 2014ல் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது. ஆனாலும் திருமணம் முடிந்த ஆறு மாதத்தில் மீண்டும் தனது படிப்பை தொடர்வதற்காக பத்மபிரியா நியூயார்க்கிற்கு பறந்துவிட, அவரது கணவர் இந்தியாவிலேயே வேலைபார்த்துள்ளார். இப்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் பத்மபிரியா.
நியூயார்க்கில் படித்துக்கொண்டே வியாபாரம் தொடர்பான பாலிசி நிறுவனத்தில் வேலையும் பார்த்தாராம் பத்மபிரியா. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி அங்கே பேய்த்திருவிழா என்னும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.. அதற்கு செல்வதற்காக பத்மபிரியா தனது அறை நண்பிகளுடன் தயாரான வேளையில் தான் மணற்புயல் வீசி சாலைகளை மறைத்துவிட்டதாம். அதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் 15 கி.மீ நடந்தே சென்று அந்த விழாவை கொண்டாடி விட்டு மீண்டும் 15 கி.மீ தூரம் நடந்தே வந்தார்களாம். நடிகைகள் என்கிற பந்தா எல்லாம் நம் ஊரில் மட்டும் தான், மற்றபடி வெளிநாடுகள் சென்றால் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பதைத்தான் பத்மபிரியா உணர்த்தியுள்ளார்.