ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை படத்தில் நாயகனாக நடித்தவர் ஜீவ ரத்தினம். திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் அவர். அதோடு, தேசிய விருது நடிகர் தம்பி ராமைய்யாவுடன் நடித்தது ரொம்ப நல்ல அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு காட்சிகளிலும் நடிப்பதற்கு முன்பே என்னை அவர் நன்றாக டியூன் பண்ணினார் என்கிறார்.
இதுகுறித்து மேலும் ஜீவரத்தினம் கூறுகையில், பேய்கள் ஜாக்கிரதை படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு புதுமுக நடிகர் மாதிரி இல்லை. நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று பலரும் சொல்கிறார்கள். குறிப்பாக, க்ளைமாக்ஸில் நன்றாக நடித்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனது நடிப்புக்கு முதல் படத்திலேயே இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு காரணம் படத்தின் வெற்றிதான். அதுதான் என்னை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அதற்கு டைரக்டர் கண்மணிக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
மேலும், தேசிய விருது நடிகர் தம்பி ராமைய்யாவுடன் நடித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நம்ம நியூபேஸ் ஆச்சே இவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்று பயந்து விடாதே. தைரியமாக நடி என்று என்னை தட்டிக்கொடுத்து நடிக்க வைத்தார். ஒரு காட்சியில் நடிக்கப்போகிறோம் என்றால், அதற்கு முன்பே நான்கைந்து தடவை ரிகர்சல் பார்த்துக்கொள்வார். அப்போது என்னை யும் நன்றாக டியூன் பண்ணினார். ஒவ்வொரு ஷாட்டையும் சிங்கிள் டேக்கில் முடிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதனால்தான் 38 நாட்களில் பேய்கள் ஜாக்கிரதை படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. நான் காமெடி காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு தம்பி ராமைய்யா சார்தான் காரணம்.
பேய்கள் ஜாக்கிரதை படத்தில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டு சில டைரக்டர்கள் கதை சொல்லியுள்ளனர். முதல் படம் பேய் படம் என்பதால் அடுத்தபடியாக வேறு மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, எல்லாதரப்பு ரசிகர்களும் அமர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய இன்டஸ்ட்ரிங்கான கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன். அதோடு, என்னைப்பொறுத்த வரை பெரிய டைரக்டர், சிறிய டைரக்டர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டேன்.
நல்ல கதை யார் சொன்னாலும் நடிப்பேன். இப்போது கேட்டுள்ள கதைகளில் அடுத்து எந்த கதையில் நடிக்கலாம் என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறேன். விரைவில் அடுத்து நான் நடிக்கும் படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் ஜீவரத்தினம்.