ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழம்பெருமை வாய்ந்த துறைமுக நகரம் ஆந்திராவின் விசாகபட்டினம். இந்த நகரின் பெருமையை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் விசாக உற்சவம் என்ற திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அந்த விழா நேற்று நடத்தப்பட்டது. விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலைஞருக்கு விருது வழங்கி கவுரவிப்பார்கள்.
இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கு 'சர்வகலா சாம்ராட் (சகலகலா சக்ரவர்த்தி)' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை உட்கார வைத்து ஆந்திர முதல்வரும், அமைச்சர்களும், நின்று கொண்டு இந்த விருதை வழங்கினார்கள். பாராட்டு பட்டயம், தங்க பதக்கம், சரஸ்வதி சிலை அடங்கியது இந்த விருது.
பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்... இப்படி பல கலை வித்தகராக இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக விழாக்குழுவினர் அறிவித்தனர். தெலுங்கு திரையுலகினர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.