ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த வருடம் '100 டேய்ஸ் ஆப் லவ்', 'ஓ காதல் கண்மணி' மற்றும் சமீபத்தில் வெளியான 'சார்லி' என துல்கர் நடிப்பில் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால் மிகப்பெரிய ஏற்றம் இருந்ததோ இல்லையோ, நிச்சயமாக துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் சரிவு இல்லை என்று உறுதியாக சொல்லலாம். இதில் மார்ச், ஏப்ரலில் இருபது நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் கொடுத்த துல்கர், நிவின்பாலியும், பிருத்விராஜும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிக்கொண்டு இருந்த சமயத்தில், தனது மூன்றாவது படத்தை ரிலீஸ் செய்ய எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது துல்கரின் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஒரு பீல்குட் லவ் ஸ்டோரி என்கிற அளவில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படம் ஓகே. ஒருமுறை பார்க்கலாம் என்கிற அளவில் இருந்ததே தவிர, திரும்பத்திரும்ப பார்க்கும் அளவிற்கோ, அல்லது மற்ற ஆடியன்ஸிடம் புகழ்ந்து சொல்லும் அளவுக்கோ விஷயங்கள் குறைவாகவே இருந்தன. அடுத்ததாக ஏப்ரலில் வெளியான மணிரத்னம் இயக்கிய 'ஒ காதல் கண்மணி' படம், ஏற்கனவே தமிழில் நடித்த 'வாயை மூடி பேசவும்' பட காயங்களுக்கு மருந்து பூசியதோடு, வெற்றியையும் கொடுத்தது. தவிர தெலுங்கிலும் டப்பிங் ஆகி துல்கருக்கு தெலுங்கில் கால் பாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.. இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான 'சார்லி' படமும் பீல்குட் படமாக நிதானமான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.. இருந்தாலும், 2016ல் இன்னொரு மாஸ் ஹிட்டுடன் துல்கர் நம்மை சந்திப்பார் என நம்புவோம்.