ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த வருடத்தில் மலையாள சினிமாவின் முடி சூடா மன்னனாக மாறினார் பிருத்விராஜ். இந்த வருடத்தில் ஐந்து படங்களில் நடித்த பிருத்விராஜுக்கு 'இவிடே' படம் தவிர மற்ற நான்கு படங்களும் வெற்றி. ஜனவரியில் மேஜர் ரவி - பிருத்விராஜ் கூட்டணியில் வெளியான 'பிக்கெட்-43' வெற்றி பெற்றதோடு பிருத்விராஜுக்கு இந்த வருட துவக்கத்தையே இனிமையாக மாற்றி அமைத்தது. இந்தப்படத்தில் இந்திய எல்லையில் காவல் காக்கும் பிருத்விராஜுக்கும் மறுபுறம் காவல் காக்கும் பாகிஸ்தானிய வீரருக்கும் நட்பை அழகாக படமாக்கி அப்ளாசை அள்ளினர் மேஜர் ரவி.
பிருத்விராஜுக்கு மகுடம் சூட்டுவதுபோல வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' ஓடோ ஓடோ என்று ஒடி, 100 நாட்களை தாண்டி இதுவரை படம் பார்க்காதவர்களை கூட தியேட்டருக்கு இழுத்து வந்தது.. உண்மை காதல் ஜோடியான காஞ்சனமாலா - மொய்தீன் கதையைத்தான் படமாக எடுத்தனர். அதோடு நின்றதா..? பிருத்விராஜுக்கு அடுத்தடுத்து வெளியான அமர் அக்பர் அந்தோணி மற்றும் அனார்கலி படங்களும் ஓட இந்த வருடத்தின் முடி சூடா அரசன் ஆனார் பிருத்விராஜ்.. அதுமட்டுமல்ல, நகரின் பெரிய தியேட்டர்களில் ஒரே நேரத்தில் இவரது மூன்று படங்களும் ஓடியது, இப்போதும் ஓடிக்கொண்டு இருப்பது வேறு எந்த நடிகருக்கேனும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகம் தான்.