ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
நாடோடிகள் உட்பட சில படங்களை இயக்கிய சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் நடிகராகவும் சில படங்களில் தலையைக்காட்டி வந்தார். அவர் நடித்த படங்களின் வெற்றியும், கிடைத்த வரவேற்பும் பட இயக்கத்தை மறக்க வைத்து, சமுத்திரக்கனியை முழுநேர நடிகராக மாற்றியது. தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார் சமுத்திரகனி. ஏற்கெனவே மோகன்லால் நடித்த 'சிக்கார்' என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக மோதவிருக்கிறார்.
தற்போது பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் 'சில சமயங்களில்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வரும் ப்ரியதர்ஷன் இந்த மலையாள படத்தை இயக்க உள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் படம் இது. இப்படத்தில் மோகன்லால் கண்பார்வை இல்லாதவராக நடிக்கவிருக்கிறார். ஒரு கொலை குற்ற வழக்கில் நிரபராதியான மோகன்லால் மீது, 'கொலைப் பழி' விழுகிறது. அந்த கொலைப் பழியிலிருந்து தப்பிக்க உண்மையான கொலையாளியை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் மோகன்லாலின் போராட்டங்கள் தான் இப்படத்தின் கதையாம்!
இப்படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி முதல் வாரம் துவங்கவிருக்கிறது. மோகன்லால், ப்ரியதர்ஷசன் கூட்டணி மலையாளத்தில் நிறைய வெற்றிப் படங்களை வழங்கிய கூட்டணி! எனவே இந்தப்படத்துக்கு கேரளாவில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.