மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நாடோடிகள் உட்பட சில படங்களை இயக்கிய சமுத்திரக்கனி இன்னொரு பக்கம் நடிகராகவும் சில படங்களில் தலையைக்காட்டி வந்தார். அவர் நடித்த படங்களின் வெற்றியும், கிடைத்த வரவேற்பும் பட இயக்கத்தை மறக்க வைத்து, சமுத்திரக்கனியை முழுநேர நடிகராக மாற்றியது. தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார் சமுத்திரகனி. ஏற்கெனவே மோகன்லால் நடித்த 'சிக்கார்' என்ற மலையாள படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக மோதவிருக்கிறார்.
தற்போது பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் 'சில சமயங்களில்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வரும் ப்ரியதர்ஷன் இந்த மலையாள படத்தை இயக்க உள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் படம் இது. இப்படத்தில் மோகன்லால் கண்பார்வை இல்லாதவராக நடிக்கவிருக்கிறார். ஒரு கொலை குற்ற வழக்கில் நிரபராதியான மோகன்லால் மீது, 'கொலைப் பழி' விழுகிறது. அந்த கொலைப் பழியிலிருந்து தப்பிக்க உண்மையான கொலையாளியை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் மோகன்லாலின் போராட்டங்கள் தான் இப்படத்தின் கதையாம்!
இப்படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி முதல் வாரம் துவங்கவிருக்கிறது. மோகன்லால், ப்ரியதர்ஷசன் கூட்டணி மலையாளத்தில் நிறைய வெற்றிப் படங்களை வழங்கிய கூட்டணி! எனவே இந்தப்படத்துக்கு கேரளாவில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.