ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோதிரக்கையால் குட்டுப்பட்டு திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா நாயர். பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'லிவிங் டுகெதர்' படத்தில் அறிமுகமான ஷிவதா நாயர், அடுத்து தமிழில் நடித்த 'நெடுஞ்சாலை' படம் மூலம் பாப்புலரானர். தற்போது மலையாள நடிகரான முரளி கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் ஷிவதா. முரளி கிருஷ்ணன் ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர். துல்கர் அறிமுகமான 'செகன்ட் ஷோ' படத்தில் முரளி கிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, 'ரகுவிண்டே ஸ்வந்தம் ரஸியா' படத்தில் ஹீரோவாக நடித்த முரளி கிருஷ்ணன் விரைவில் வெளியாக இருக்கும் 'ஜக்காரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு' என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். ஷிவதாவும், முரளி கிருஷ்ணனும் நண்பர்களின் விழாக்களில் சந்தித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி, இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிகழ்ச்சிவரை வெற்றிகரமாக வந்துவிட்டது. தற்போது பாபி சிம்ஹாவுடன் 'பாம்புசட்டை' மற்றும் அசோக் செல்வனுடன் 'ஜீரோ' ஆகிய படங்களில் நடித்து வரும் ஷிவதா நாயர், விரைவில் தனது திருமண தேதியை அறிவிக்க இருக்கிறாராம்.