ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. அதையடுத்து விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என மெகா படங்களில் நடித்த அவர் பின்னர் நடித்த படங்கள் வெற்றியாக அமையாததால் ஸ்ரேயாவின் மார்க்கெட் கவிழ்ந்தது. அதனால் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடிய பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை ஸ்ரேயா.ஆனபோதும், தெலுங்கு, இந்தியில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது முப்பத்தி மூன்று வயதாகி விட்ட ஸ்ரேயா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த செய்தியை மறுத்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அதில், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் உள்ளது. அதோடு, எனக்கென்று இறைவன் முடிவு செய்து வைத்திருக்கும் நபர் என் கண்ணெதிரே தோன்றும்போது அவரை திருமணம் செய்து கொள்வேன்.
மேலும், தற்போது நான் மும்பையில் பெரிய அளவிலான ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறேன். இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் கண் பார்வை இல்லாத பெண்கள்தான். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறேன் என்று கூறும் ஸ்ரேயா, என்னை நம்பி வந்திருக்கும் பார்வையில்லாதவர்களுக்கு விழி போல இருந்து நான் உதவிகள் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.