ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் படங்களுக்குக் கதை எழுதித் தரும் கதையாசிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகா என ஒரு குழுவே செயல்படும். சமீப காலமாக தமிழ் சினிமாவில் கதையாசிரியர்கள் என்பது மிகவும் குறைந்து போய்விட்டது, ஏன் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நல்ல வேளை வசனகர்த்தார்கள் மட்டும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் பலர் கூட ஹீரோக்களுக்கு 'பன்ச்' வசனங்கள் எழுதிக் கொடுத்தால்தான் பெயர் வாங்க முடிகிறது.
ஆனால், தெலுங்குத் திரையுலகில் அப்படி இல்லை. அங்கு இன்னமும் ஒரு சில கதையாசிரியர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்குப் பிடிக்கும் விதத்தில்தான் அவர்களால் கதையை எழுதித் தர முடியவில்லை. கடந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளன்றே 150வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். அதன்பின் பூரி ஜெகன்னாத் இயக்குவதாகச் செய்திகள் வெளியானது. அந்தக் கதையிலும் தனக்குத் திருப்தியில்லை என்று சிரஞ்சீவி விலகிவிட்டார் என்றார்கள். தொடர்ந்து பல கதையாசிரியர்களிடமும், இயக்குனர்களிடமும் கதை கேட்டாராம் சிரஞ்சீவி. எதுவுமே அவருக்குத் திருப்தியாக இல்லை என்பதால்தான் அவருடைய படம் தள்ளிப் போகிறதாம். இது சம்பந்தமாக தனது நெருங்கிய வட்டாரங்களிடமும் தெலுங்குத் திரையுலகில் திறமையான கதையாசிரியர்கள் இல்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிலிருந்து விஜய் நடித்த 'கத்தி', கவுண்டமணி நடித்த '49 ஓ' ஆகிய படங்களை அவர் ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருந்தார் என்றும் கூட சொன்னார்கள். இப்போதோ, தென்னிந்தியாவை விட்டு, பாலிவுட் கதாசிரியகர்களிடம் கதை கேட்கலாமா என யோசித்து வருகிறார்களாம். எப்படியும் அடுத்த ஆண்டு சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிய அறிவிப்பு வந்துவிடும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.