ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாட்டை படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் சவுகார்பேட்டை, ஸ்ரீகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அதில் ஒன்று மந்திரவாதி மற்றொன்று சவுகார்பேட்டை இளைஞன். ராய் லட்சுமி சவுகார்பேட்டை சேட்டு பொண்ணாக இருந்து பேயாக மாறுகிற கேரக்டர். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். டிசம்பர் மாதம் வெளிவருகிறது.
அரண்மனை படத்தில் பேயாக நடித்த அனுபவத்தை கொண்டு ராய் லட்சுமி இதில் காட்டு காட்டு என்று பயம்காட்டுகிறார். இதுபற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது: அரண்மனை படம் பார்த்து தான் அவரை இந்த படத்துக்கு கமிட் செய்தோம். பேய் வேடம் கொஞ்சம் அகோரமாகவும் நடிக்க வேண்டும். சுடுகாட்டில் ஷூட்டிங் இருக்கும் என்றோம். அதற்கு ஒப்புக்கொண்டு நடித்தார். "எனக்கு கேரக்டர் பிடிச்சிருக்கு அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்றேன்" என்று துணிச்சலுடன் வந்தார்.
சில காட்சிகளில் அவர் தொண்டை கிழியும் அளவுக்கு கத்தி நடித்துவிட்டு பிறகு தொண்டை வலியால் அவதிப்பட்டார். சில காட்சிகளுக்கு பல மணி நேரம் மேக்அப் போட வேண்டியது இருந்தது. இதற்காக மணி கணக்கில் காத்திருந்தார். அந்த அளவிற்கு டெடிக்கேட்டிவாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் ராய் லட்சுமியை ரசித்து பார்ப்பவர்கள் அதன்பிறகு பயப்படுவார்கள் என்கிறார் வடிவுடையான்.