அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
காஜல்அகர்வால், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் மும்பையில் இருந்து வந்தவர்கள். இந்தி சினிமா கைகொடுக்காததால் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகையாகி விட்டனர். அதோடு, பாலிவுட் நடிகைகளுக்கு இணையாகவும் கமர்சியல் படங்களில் கிளாமராக நடித்து பெருவாரியான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து மேகா படத்திற்காக மும்பையில் இருந்து இறக்குமதியான இன்னொரு நடிகை சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு டார்லிங், எனக்குள் ஒருவன் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவர், புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்திற்கு பிறகு நடித்த கத்துக்குட்டி படத்தில் அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. அதோடு, அதையடுத்து வில்அம்பு, அச்சமின்றி, நவரச திலகம், காலக்கூத்து ஆகிய படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வேகத்தோடு கோடம்பாக்கத்தில் அழுத்தமாக காலூன்றி விட வேண்டும் என்று அடுத்தபடியாக தான் நடிக்கயிருக்கும் புதிய படங்களில் அதிரடி பிரவேசம் செய்ய முடிவெடுத்துள்ள சிருஷ்டி டான்கே, அந்த படங்களில் தமன்னாவை மிஞ்சும் கிளாமரை வெளிப்படுத்த க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். அதனால் புதிய கவர்ச்சியை தேடும் இயக்குனர்கள் சிருஷ்டியை காண்டாக்ட் பண்ணத் தொடங்கி விட்டனர்.