ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கற்றது தமிழ், தங்கமீன்கள் படங்களைத் தொடர்ந்து தரமணி படத்தை இயக்கி வருகிறார் ராம். முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்குமிடையே ஆறு வருட இடைவெளி கொடுத்து அவர், தனது மூன்றாவது படத்தை இடைவெளி கொடுக்காமல் எடுத்து வருகிறார். இந்நிலையில், தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள மெல்லிசை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் ராம். அப்போது தனது உதவியாளரை பாராட்டிய அதேசமயம், அப்பட நாயகன் விஜயசேதுபதியையும் மனதார பாராட்டினார்.
அப்போது ராம் கூறும்போது,
முதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இவையெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஒரு இயக்குனருக்கு அவரது முதல் படம் தரக்கூடிய பரவசம் சிறப்பானது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அதோடு, என்னுடைய உதவியாளர் என்கிற முறையில் இந்த படத்தை இயக்கிய அவர் எனக்கு தந்திருக்கிற பரவசம் அதைவிட சிறப்பானது.
2004ல் உள்ளே இருந்து சில குரல்கள் -என்ற கோபிகிருஷ்ணனின் புத்தகத்தோடு என்னிடம் வந்தார் ரஞ்சித் ஜெயக்கொடி. கவிதை, தமிழ் இலக்கியம் தெரிந்தவர். உலக சினிமாவை பார்க்கக்கூடியவர். கிராமத்திலுள்ள வன்மம், கோபம், காதல், கவிதை எல்லாம் கலந்த ஒரு படைப்பாளி. அது அவரது இந்த மெல்லிசை படத்தின் ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இந்த நகரத்துல சுவராஸ்யமா வாழலாம். ஆனா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்களா என்று கேட்கிற ஒரு கேள்வி. அந்த வரி ஒன்றே போதும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து, யாருடைய தயவும் இல்லாமல், யாருடைய சிபாரிசும் இல்லாமல் தானாக முளைத்த ஒரு காட்டு மரம் விஜயசேதுபதி. அந்த காட்டு மரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வந்தா மலை போனா சென்சாரில் கட் பண்ணக்கூடிய அந்த வார்த்தையை போல் இருப்பவர். எந்தமாதிரி கதைகளையும் மிகத்துணிச்சலுடன் செய்பவர்.
இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா பண்ணக்கூடிய அதே நேரத்தில் பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் போன்ற படங்களையும் பண்ணினார். மேலும், யாருடைய தயவும் இல்லாமல் வந்த வர்களுக்குத்தான், புதியவர்களையும் புதிய விசயங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோதிடமும், தைரியமும் இருக்கும். அது விஜயசேதுபதியிடம் இருக்கிறது. இது அவரை தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு எடுத்து செல்லும். அந்தவகையில், நிஜமாலுமே விஜயசேதுபதி ஒரு ரவுடிதான் என்றார்.
மேலும், காத்திருப்பதே தவம், காத்திருத்தலே கலை என்று நான் ஏன்டா சொன்னேன்னு இருக்கு. ஏனென்றால், எனது படங்களை 75 நாட்களில் எடுத்து விடுகிறேன். ஆனால் படங்கள் வெளியாக 3 வருடங்கள் ஆகி விடுகிறது. என்னுடைய அந்த சாபம் எனது உதவி இயக்குனர்களையும் பின்தொடர்கிறது. இந்த சாபத்தில் இருந்து நானும், எனது உதவி இயக்குனர்களும் தப்பிக்க வேண்டும் என்றார்.