ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரொம்பவே பிஸியாக இருக்கிறார் என்பது போலத்தான் இனியா நடிக்கும் படங்களின் பட்டியலை பார்த்தால் தெரிகிறது. மலையாளத்தில் நான்கு, தமிழில் இரண்டு, தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒன்று என கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேலே நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நேரத்தில் தான் இயக்குனர் நாதிர்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. சிறப்பு தோற்றம் தான். மூன்றே நாள் கால்ஷீட் தந்தால் போதும்.. ஆனால் அழைத்தது பிருத்விராஜ் படத்தில் நடிக்க.. கூடவே ஜெயசூர்யா, இந்திரஜித் இருவரும் இருக்கிறார்கள்..
வந்த வாய்ப்பை வேண்டாம் என தவறவிடுவாரா இனியா..? உடனே ஒகே சொல்லிவிட்டார்.. அதுதான் 'அமர் அக்பர் ஆண்டனி'. நேற்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் இனியா கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஜனப்ரிய நாயகன் திலீப்பை பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோசம். மேடையில் பேசும்போது, மலையாளத்தில் ஓரளவு முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன்.. திலீப்புடன் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை.. அதுவும் விரைவில் நிறைவேறு என நம்புகிறேன்” என் போகிற போக்கில் ஒரு அப்ளிகேஷனை போட்டுவிட்டு கிளம்பினார்.