ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெப்பம்,நான் ஈ போன்ற படங்களில் நடிதுள்ள தெலுங்கு நடிகர் நானி அண்மையில் நடித்த பலே பலே மகாதேவோ சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகின்றது. துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணி திரைப்படம் வெளிவந்து வெற்றிப் படமாக அமைந்தது. ஓகே கண்மணி படம் ஓகே பங்காரம் என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் துல்கர் சல்மான்,கார்த்தி,நித்யா மேனன்,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் துல்கர் சல்மான் மலையாளப் படங்களில் பிசியாக இருப்பதால் அவர் இப்படத்தில் நடிக்க மாட்டார் என சில நாட்களாக தகவல்கள் உலா வருகின்றன. துல்கர் கதாபாத்திரத்தில் நடிகர் நானி நடிக்கவிருப்பதாக தற்போது டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகே பங்காரம் படத்தில் துல்கருக்கு நானி தான் பின்னணி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.