ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் இ ரோஜுலு, பிரேம கதா சித்திரம், முதல், பலே பலே மகாதேவோ வரை தொடர்ச்சியாக ஐந்து ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் மாருதி மீண்டும் வெற்றிப் படம் கொடுக்க தீவிரமாக கதையை தயார் செய்து வருகின்றாராம். குறைந்த பட்ஜெட்டில் மாறுபட்ட திரைக்கதைகள் கொண்ட படங்களை இயக்கி அதிக லாபம் ஈட்டியவர் மாருதி. அண்மையில் நடிகர் நானி நடிப்பில் மாருதி இயக்கிய பலே பலே மகாதேவோ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டியது. நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை மாருதி சந்தித்துப் பேசினார். அப்போது பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாருதி அமெரிக்க தெலுங்கு திரை உலக ரசிகர்கள் தன்னை சந்தித்து பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மாருதி தெரிவித்துள்ளார். மேலும் இதே வேகத்தோடு அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் மாருதி கூறியுள்ளார்.