ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு படங்களில் கதாநாயகன் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ராணா, தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். பாகுபலி படத்தில் தனது வில்லத்தனத்தால் மிரட்டிய ராணா, தற்போது பெங்களுர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார். அதுமடுமல்லாமல் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ராணா தயாராகி வருகின்றார். இந்நிலையில் தமிழில் பெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி வேடத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம்.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கதில் வெளிவந்த தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று நடிகர் அரவிந்த் சாமி. அரவிந்த் சாமியின் நடிப்பும், தோற்றமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தன. தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார். இப்படத்திலும் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் கேட்ட போது அதை அவர் மறுத்து விட்டார். இதனால் ராணாவை இக்காதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. ராணா மறுக்கும் பட்சத்தில் நடிகர் சுதீப் கிஷானை அணுக படக்குழு முடிவு செய்துள்ளது. தனி ஒருவன் படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார்.