ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள இயக்குனர் சித்தார்த் பரதன் என்பவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவருகிறார் என சொல்லியிருந்தோம் அல்லவா..? தற்போது மேஜர் அறுவை சிகிச்சை முடிந்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இருந்தாலும் அவரது கால்களில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓய்வும் பிசியோதெரபி சிகிச்சையும் எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். அதனால் இந்த மூன்று மாதத்தில் மோகன்லாலுக்காக பக்காவாக ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ண இருக்கிறாராம் சித்தார்த் பரதன்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திலீப்பை வைத்து தனது முதல் படமான 'சந்திரேட்டன் எவிடயா' என்கிற ஹிட் படத்தை கொடுத்த சித்தார்த், அடுத்ததாக மோகன்லாலை வைத்து படம் இயக்கும் முடிவில், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாராம். தான் தயார்செய்திருக்கும் ஒன்லைன் ஒன்றை மோகன்லாலிடம் டிஸ்கஸ் செய்வதற்காக அவரை சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் இவர் விபத்தில் சிக்கினாராம். அதனால் இந்த மூன்று மாத ஓய்வில் முழு கதையையும் தயார்செய்துகொண்டே மோகன்லாலை சந்திக்க திட்டமிட்டுள்ளார் சித்தார்த் பரதன்.. மோகன்லாலை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய மறைந்த பிரபல மலையாள இயக்குனர் பரதன் மற்றும் பிரபல நடிகை கே.பி.ஏ.சி லலிதா ஆகியோரின் மகன் என்பதால் தன்னை எந்த நேரத்திலும் சந்திக்கும் உரிமையை இவருக்கு கொடுத்திருக்கிறாராம் மோகன்லால்.