ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் திரைக்கு வந்து வசூலிலும் சக்கை போடு போட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த கத்தி திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது. கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக பிரபல நடிகர்கள் பவன் கல்யாண், ஜுனியர் என்.டி.ஆர் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு மாஸ் கதை எதுவும் கிடைக்காததால் அவரது மகன் ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவி நடிக்கின்றார். அப்படத்திற்கு பின்னர் தான் நாயகனாக நடிக்கும் படத்திற்கு பல கதைகளைக் கேட்டு திருப்தி படாத சிரஞ்சீவி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ராம் சரண் கத்தி படத்திற்கான தெலுங்கு ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.