ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்துள்ள 'புலி' படம் கேரளாவில் 200 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செய்தி வெளியிட்டிருந்தோம்.. கூடவே இது குறித்து முக்கியமான ஒரு நபர் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறாரே என்றும் நினைத்துக்கொண்டிருந்த வேலையில், கூண்டிலிருந்து அந்த சிங்கம் வெளியேறி 'புலி'க்கு செக் வைக்கும் விதமாக உறுமியுள்ளது. வேறு யார், கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர் தான் அவர். வரும் அக்-1ஆம் தேதி வெளியாக இருக்கும் புலி' படத்திற்கு 200 தியேட்டர்கள் எல்லாம் தரவே முடியாது என நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அதாவது பாகுபலி ரிலீசுக்குப்பின் கேரள சினிமா வட்டாரத்தில் அதிகம் தலைதூக்கியுள்ளது இந்த 'வைட் ரிலீஸ்' எனப்படும் பெரிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்குவது தொடர்பான பிரச்சனை. சமீபத்தில் ஓணம் ரிலீசின்போது இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று கூட பிருத்விராஜ் படத்திற்கு இப்படி அதிக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என பஷீர் முரண்டு பிடித்ததால் ஒரு வாரம் தாமதமாகத்தான் அந்தப்படம் வெளியானது. இப்போது 'புலி'க்கு எதிராகவும் லிபர்ட்டி பஷீர் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆக 'புலி' படம் அறிவித்த தேதியில் கேரளாவில் வெளியாகுமா, அப்படியே வெளியானாலும் 200 தியேட்டர்களில் வெளியாகுமா என்பது சந்தேகம் தான்.